கோவையில் போலீஸ் எனக் கூறி இரும்பு வியாபாரியிடம் பணம் பறிப்பு - 2 பேர் கைது

கோவை ஒண்டிப்புதூர் அருகே போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி இரும்பு வியாபாரியிடம் பணம் பறித்த தனியார் நிறுவன காவலாளி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது54). இவர் இருகூர் சாலையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் அவரது கடைக்கு வந்த இரண்டு பேர், தங்களை போலீஸ் அதிகாரி எனக் கூறி அறிமுகம் ஆகியுள்ளார்.

மேலும், சிவலிங்கத்திடம், கடையில் திருட்டுப் பொருட்களை வாங்கி வைப்பதாக புகார் வந்ததுள்ளது அது உண்மையா? என விசாரணை நடத்துவதுபோல் அந்த நபர்கள் பேசியுள்ளனர். ஆனால், அவ்வாறான பொருட்கள் வாங்குவது இல்லை என சிவலிங்கம் கூறிய நிலையில், போலீஸ் அதிகாரி என கூறிய நபர்கள் ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.

இதையடுத்து, சிவலிங்கமும் ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்குவந்த இரும்புக்கடை உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோரிடம் சிவலிங்கம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள், இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு போலீஸ் அதிகாரி எனக் கூறி பணம் பறித்த இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது பிடிபட்ட நபர்கள் போலியான போலீஸ்காரர்கள் என்பது தெரியவந்தது.



மேலும், அதில் ஒருவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி (வயது57), என்பதும், அவர் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்தததும், மற்றொரு நபர் கோவை அண்ணா நகரை சேர்ந்த பூபதிகுமார் (49), என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் தங்களை போலீஸ் அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...