உடுமலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரிப்பால், நகராட்சி தினசரி சந்தையில் தக்காளி விலை கடுமையாகச் சரிந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி 300 ரூபாயில் இருந்து 240 ரூபாயாக குறைந்தது.



உடுமலை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால், விலை சரிந்து காணப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி தினசரி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் விளைபொருட் களை விற்பனைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் தக்காளி விற்பனை அதிகரித்த நிலையில், 14 கிலோ கொண்ட பெட்டி, 300 ரூபாய் வரை விற்பனையானது.



இந்நிலையில், இன்று ஒரு பெட்டி தக்காளி 240 ரூபாய் வரை மட்டுமே விலைபோனது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் இருந்தும் தக்காளி வரத் தொடங்கியுள்ளது.



உடுமலை சந்தையில், உள்ளூர் வியாபாரிகள் மட் டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். வரத்து அதிகரிப்பால் தக்காளி மொத்த விற்பனை விலை சரிந்துள்ளநிலையில், சில்லரை வர்த்தகத்திலும், விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...