திருப்பூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி - பரிசை வென்ற உடுமலை விவசாயி!

திருப்பூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றிபெற்ற உடுமலை விவசாயிக்கு குடியரசு தினவிழாவில் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழா முன்னிட்டு வருடத்தோறும் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு குடியரசு தின விழா அன்று பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ள சம்பந்தப்பட்ட தாலுக்காவில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் 100 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், இந்த நிலையில் உடுமலை அருகே உள்ள ஆலம்பாளையம் பகுதியில் விவசாயி பழனிச்சாமி பயிர்விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டார்.

அதிகாரிகளின் களஆய்வுக்குபின் மக்காச்சோளம் சாகுபடியில் அதிகப்படியான மகசூல் எடுத்த காரணத்தால் திருப்பூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் உடுமலை விவசாயி இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து, நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற விவசாயி பழனிசாமிக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதேபோல், மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் முதலிடம் பிடித்த பொங்கலூர் வட்டாரம் அம்மாபாளையம் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜூக்கு பத்தாயிரம் ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழ் ஆட்சியரால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...