உடுமலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - 2 பேரை கைது செய்த போலீஸ்

உடுமலை அருகே உணவகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பட்டப்பகலில் திருடிச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்னதர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


உடுமலை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது49). இவர் நேற்று முன்தினம் காலை தனது நண்பரை சந்திப்பதற்காக குமரலிங்கம் வந்துள்ளார்.

அப்போது, உடுமலை-பழனி சாலையில் உள்ள உணவகத்தின் முன்புறம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சாப்பிட சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணபிரான், அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் நிறைந்த முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அக்கம்பக்கத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மற்றும் ரோந்துப் பணியினை போலீசார் மேற்கொண்டனர். இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்து, அதன் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை சுரண்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களைப் பிடித்து நடத்திய விசாரணையில் அது உணவகத்தின் முன் திருடப்பட்ட கண்ணபிரானின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட இருவரும், குமரலிங்கம் இந்திரா வீதியைச் சேர்ந்த அருள்ராஜ் (வயது38) மற்றும் ஜாஹிர் உசேன் வீதியைச் சேர்ந்த பகவதி (வயது27) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

பிடிப்பட்ட இரண்டு பேரும் கடைசி வரை திருடியதை ஒத்துக் கொள்ளாததோடு, 'அது எங்க வண்டி சார், கொடுங்க சார்.. நாங்க கிளம்பணும்' என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...