மேட்டுப்பாளையத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் வந்த அரசுக் கோப்புகள் - வைரல் வீடியோ

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குடியரசு தினத்தன்று சிக்கதாசம்பாளையம் கிராம சபை கூட்டத்திற்காக, ஊராட்சி அலுவலகத்தில் இருந்த அரசுக் கோப்புகளை குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாம்பாளையம் கிராமத்தில் குடியரசு தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் வெள்ளிப்பாளையம் கிராமத்தில் நடந்தது.



இதற்காக பொதுமக்கள் அங்கு கூடியிருந்த நிலையில், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டிய ஆவணங்களை குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிகழ்வை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கிராம சபா கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விபர மற்றும் பஞ்சாயத்து அலுவலக கோப்புகளை முக்கியமாக கருதாமல், ஒரு குப்பை என்ற எண்ணத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் இந்தச் செயலில் ஈடுபட்டார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



மேலும், கிராம சபை கூட்டத்திற்கு காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் வராத நிலையில், வேறு வாகனங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் குப்பை அள்ளும் வாகனத்தில் பஞ்சாயத்து பதிவேடுகள் மற்றும் கோப்புகளை எடுத்து வந்ததாக ஊராட்சி அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே சிக்கதாசம்பாளையம் பஞ்சாயத்து அலுவலக செயல்பாடுகள் குறித்து மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில், கிராமசபா கூட்ட தினத்தன்று மக்கள் பார்வைக்கு வைக்க கோப்புகளை ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக கையாண்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கோப்புகளை பொறுப்பற்ற முறையில் இப்படி குப்பை வண்டியில் கொண்டுவந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...