மேட்டுப்பாளையத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் வந்த அரசுக் கோப்புகள் - வைரல் வீடியோ

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குடியரசு தினத்தன்று சிக்கதாசம்பாளையம் கிராம சபை கூட்டத்திற்காக, ஊராட்சி அலுவலகத்தில் இருந்த அரசுக் கோப்புகளை குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாம்பாளையம் கிராமத்தில் குடியரசு தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் வெள்ளிப்பாளையம் கிராமத்தில் நடந்தது.



இதற்காக பொதுமக்கள் அங்கு கூடியிருந்த நிலையில், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டிய ஆவணங்களை குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிகழ்வை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கிராம சபா கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விபர மற்றும் பஞ்சாயத்து அலுவலக கோப்புகளை முக்கியமாக கருதாமல், ஒரு குப்பை என்ற எண்ணத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் இந்தச் செயலில் ஈடுபட்டார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



மேலும், கிராம சபை கூட்டத்திற்கு காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் வராத நிலையில், வேறு வாகனங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் குப்பை அள்ளும் வாகனத்தில் பஞ்சாயத்து பதிவேடுகள் மற்றும் கோப்புகளை எடுத்து வந்ததாக ஊராட்சி அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே சிக்கதாசம்பாளையம் பஞ்சாயத்து அலுவலக செயல்பாடுகள் குறித்து மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில், கிராமசபா கூட்ட தினத்தன்று மக்கள் பார்வைக்கு வைக்க கோப்புகளை ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக கையாண்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கோப்புகளை பொறுப்பற்ற முறையில் இப்படி குப்பை வண்டியில் கொண்டுவந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...