ஜடையம்பாளையம் புதூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கோவை: ஜடையம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜடையம்பாளையம் புதூரில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் ஜடையம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் போதைப் பொருள்கள் விற்கப்படாது என்றும், மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இளைஞர்கள் பொதுமக்கள் நலனில் ஜடையம்பாளையம் ஊராட்சி முழு பங்களிக்கும் என்றும், ஊராட்சி தலைவர் பழனிச்சாமி தலைமையில் ஊர் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேபோன்று பெள்ளேப்பாளையம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் சிவகுமார் தலைமையில் எச்ஐவி தொற்றுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.