பொள்ளாச்சி அருகே கராச்சேரியில் கிராம சபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு அருகே கராச்சேரியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்று தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டு.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கராச்சேரியில் குடியரசு தின விழாவை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.



பொதுமக்கள் கூறிய கருத்துக்களைக் கிராம சபைக் கூட்டத்தில் உள்ள பதிவேட்டில் பதியும்படி அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் அரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியை பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் சமீரன் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.



இதில் அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா உட்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...