பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி

பல்லடத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து டிராக்டர் பேரணி. நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற கோரி விவசாயிகள் வலியுறுத்தல்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர்.



ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்லடத்தில் ராயர்பாளையத்தில் இந்த டிராக்டர் பேரணி தொடங்கியது.



அங்கிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக சென்றனர்.



அப்போது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் கொடுக்க வேண்டும், எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து விவசாய பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், சிறு குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த டிராக்டர் பேரணி நடைபெற்றது.



டிராக்டர் பேரணியில், பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய ஊர்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...