பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி

பல்லடத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து டிராக்டர் பேரணி. நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற கோரி விவசாயிகள் வலியுறுத்தல்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர்.



ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்லடத்தில் ராயர்பாளையத்தில் இந்த டிராக்டர் பேரணி தொடங்கியது.



அங்கிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக சென்றனர்.



அப்போது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் கொடுக்க வேண்டும், எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து விவசாய பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், சிறு குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த டிராக்டர் பேரணி நடைபெற்றது.



டிராக்டர் பேரணியில், பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய ஊர்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...