கோவையில் பணம் தரமறுத்த ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கி பணம் பறிப்பு - 3 பேர் கைது

கோவை செல்வபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த ஜேசிபி ஆப்ரேட்டரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்ற மூன்று பேர் கைது.



கோவை: பேரூர் சாலையில் உள்ள டாஸ்மார்க் அருகே குடிக்கப் பணம் தாராத ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (42). ஜேசிபி ஆப்ரேட்டரான இவர் நேற்று பேரூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது அவருக்குத் தெரிந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சா என்பவர், தனது இரண்டு நண்பர்களுடன் வந்துள்ளார். மேலும் ஜான்சா மதுகுடிக்க அருண்குமாரிடம் பணம் கேட்டதாகத் தெரிகிறது.

ஆனால் அருண்குமார் பணம் கொடுக்க மறுத்ததால் அவருடன் வந்த இஸ்மாயில் (28) மற்றும் முஸாமில் (32) இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து ஜான்சா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருண்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் அருண்குமார் அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார், ஜான்சா (37), இஸ்மாயில் (28), முசாமில் (32) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...