திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளத்தில் திமுக சார்பில் பொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உடுமலை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ஜெயராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழ்நாடு முதல்வரின் எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் பல்வேறு தரப்பு மக்களிடம் விரைவாக சென்றுள்ளது. குறிப்பாக ஜாதி பேதம் இல்லாமல் அனைத்து மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் பாடுபட்டு வருகின்றார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவது அதிகரித்து வருகிறது. மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லாத தொகுதியிலும் அனைத்து தர மக்களுக்கும் தமிழ்நாடு அரசு திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. மொத்தத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து தர மக்களையும் வெகுவாக ஈர்த்து வருகிறது" என்றார்.
கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழ்நாடு முதல்வரின் எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் பல்வேறு தரப்பு மக்களிடம் விரைவாக சென்றுள்ளது. குறிப்பாக ஜாதி பேதம் இல்லாமல் அனைத்து மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் பாடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவது அதிகரித்து வருகிறது. மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லாத தொகுதியிலும் அனைத்து தர மக்களுக்கும் தமிழ்நாடு அரசு திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. மொத்தத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து தர மக்களையும் வெகுவாக ஈர்த்து வருகிறது" என்றார்.