181 சதவீதம் கூடுதல் கொடி நாள் வசூல் - கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு விருது!

கொடி நாள் வசூலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 181 சதவீதம் கூடுதலாக வசூலித்த கோவை மாநகராட்சிக்கு, இன்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் விருது அளிக்கப்பட உள்ளது.


கோவை: கொடி நாள் வசூலில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக வசூலித்த கோவை மாநகராட்சிக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று விருது அளிக்க உள்ளார்.

முப்படை வீரர்களின் நலனை காக்க ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் படை வீரர்கள் நலனுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது.

மேலும் இவ்வாறு கொடிநாள் வசூல் செய்யும் சிறந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தன்று விருதுகளும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கொடி நாள் வசூலில் மாவட்ட ரீதியாக சென்னை அதிக வசூல் செய்து விருது பெறுகிறது.



நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக வசூல் செய்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது.

அதேபோல் மாநகராட்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி அதிக பணம் வசூல் செய்து முதலிடத்தையும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வசூல் செய்து கோவை மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் இலக்கில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

அதன்படி கோவை மாநகராட்சிக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் நிர்ணயித்த கொடினால் நிதியை விட நிதியாக 43,22,820 வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 181% அதிகம். எனவே சிறப்பான முறையில் நிதி வசூல் செய்ததற்காக கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு விருது வழங்கப்படுகிறது.

இதனை சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பெற உள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...