கோவையில் குடியரசு தின கொண்டாட்டம் - அதிகாரிகளுக்கு நன்சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கோவை உஉசி மைதானத்தில் 74வது குடியரசு தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள், நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தேசிய கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து நடந்த காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.



பின்னர் காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களை ஆட்சியர் சமீரன் வழங்கினார். அதன்படி முதலமைச்சர் காவலர் பதக்கமானது மாநகர காவல் துறையினர் 69 பேருக்கும், மாவட்ட காவல் துறையினர் 43 பேருக்கும் வழங்கப்பட்டன.



மேலும், சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினர்களுக்கான நற்சான்றிதழ், மாநகர காவலர்கள் 61 பேருக்கும், மாவட்ட காவலர்கள் 66 பேருக்கும் வழங்கப்பட்டன.



சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் 136 பேருக்கும் வழங்கப்பட்டன.



இதனை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவில், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், குடியரசு தினத்தினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் திருவுருவ சிலைகளுக்கு அந்தந்த வட்டாட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வ உ சி மைதானம் வந்திருந்தனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...