கோவையில் குடியரசு தின கொண்டாட்டம் - அதிகாரிகளுக்கு நன்சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கோவை உஉசி மைதானத்தில் 74வது குடியரசு தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள், நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தேசிய கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து நடந்த காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.



பின்னர் காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களை ஆட்சியர் சமீரன் வழங்கினார். அதன்படி முதலமைச்சர் காவலர் பதக்கமானது மாநகர காவல் துறையினர் 69 பேருக்கும், மாவட்ட காவல் துறையினர் 43 பேருக்கும் வழங்கப்பட்டன.



மேலும், சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினர்களுக்கான நற்சான்றிதழ், மாநகர காவலர்கள் 61 பேருக்கும், மாவட்ட காவலர்கள் 66 பேருக்கும் வழங்கப்பட்டன.



சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் 136 பேருக்கும் வழங்கப்பட்டன.



இதனை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவில், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், குடியரசு தினத்தினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் திருவுருவ சிலைகளுக்கு அந்தந்த வட்டாட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வ உ சி மைதானம் வந்திருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...