கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு அகற்றம்!

கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, மருத்துவர்கள் அகற்றினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் குழந்தையின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு பிரிவு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். மேலும் குழாய் மூலமாக கருவியை செலுத்தி சுவாச குழாயில் சோதனை செய்தபோது குழந்தையின் சுவாசக் குழாயில் பிளாஸ்டிக் துண்டு சிக்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக தலைமை மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் பிளாஸ்டிக் துண்டை பத்திரமாக அகற்றினர். மேலும் பிளாஸ்டிக் துண்டு அகற்றப்படாமல் இருந்திருந்தால் நேரடியாக அது குழந்தையின் நுரையீரலுக்கு சென்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு உடனடியான சிகிச்சை மேற்கொண்டு பிளாஸ்டிக் துண்டுகளை அகற்றிய மருத்துவர்களை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...