கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு அகற்றம்!

கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, மருத்துவர்கள் அகற்றினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் குழந்தையின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு பிரிவு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். மேலும் குழாய் மூலமாக கருவியை செலுத்தி சுவாச குழாயில் சோதனை செய்தபோது குழந்தையின் சுவாசக் குழாயில் பிளாஸ்டிக் துண்டு சிக்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக தலைமை மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் பிளாஸ்டிக் துண்டை பத்திரமாக அகற்றினர். மேலும் பிளாஸ்டிக் துண்டு அகற்றப்படாமல் இருந்திருந்தால் நேரடியாக அது குழந்தையின் நுரையீரலுக்கு சென்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு உடனடியான சிகிச்சை மேற்கொண்டு பிளாஸ்டிக் துண்டுகளை அகற்றிய மருத்துவர்களை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...