இதய தெய்வம் மாளிகையில் தொண்டர்கள் இல்லாமல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்


கோவையில் இதய தெய்வம் மாளிகையில் அதிக அளவில் தொண்டர்கள் இல்லையென்றாலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது. இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 



சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிட முடியாது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது குற்றவாளி சசிகலா முதல்வராகும் கனவு தவிடுபொடியானது.



சசிகலா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து 4 வாரத்தில் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நீதிபதிகளுமே ஒரே தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியதை அடுத்து சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் முக்கியமான 20 இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...