இதய தெய்வம் மாளிகையில் தொண்டர்கள் இல்லாமல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்


கோவையில் இதய தெய்வம் மாளிகையில் அதிக அளவில் தொண்டர்கள் இல்லையென்றாலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது. இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 



சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிட முடியாது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது குற்றவாளி சசிகலா முதல்வராகும் கனவு தவிடுபொடியானது.



சசிகலா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து 4 வாரத்தில் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நீதிபதிகளுமே ஒரே தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியதை அடுத்து சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் முக்கியமான 20 இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...