உடுமலையில் கொலை குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

உடுமலையில் கொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


திருப்பூர்: உடுமலை அடுத்த புக்குளம் பேருந்து நிறுத்ததில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது கல்லைப்போட்டு கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புக்குளம் பகுதியில் தனலட்சுமி(40) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி பின்னர் கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

சில நேரங்களில் புக்குளம் பேருந்து நிறுத்தத்தில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 2ஆம் தேதி தலையில் ரத்தக்காயத்துடன் புக்குளம் பேருந்து நிலையத்தில் அவர் இறந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் உடுமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, தடயங்களைச் சேகரித்து பின்பு தனலட்சுமி சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனலட்சுமியின் சகோதரர் சுப்பிரமணியன்(58), கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தின் அருகே செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததன் மூலம் சந்தேகத்தின் பேரில் உடுமலை பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (33) என்பவரைப் பிடித்து விசாரித்ததில் புக்குளம் பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனலட்சுமியை, கல்லை தலையில் போட்டுக் கொலை செய்தது தெரிய வந்தது.



இதனையடுத்து ஏரிப்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியராஜை டிசம்பர் 04ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் பரிந்துரையின் பேரில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆரோக்கியராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.எஸ். வினீத்க்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் ஆரோக்கியராஜை தடுப்புக் காவலில் வைப்பதற்கான ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி கோவை மத்திய சிறையிலிருந்த ஆரோக்கியராஜிடம் உடுமலைப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தடுப்புக்காவல் ஆணையை வழங்கினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...