தைப்பூச திருவிழா- கோவை, திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ததைப்பூச விழாவை முன்னிட்டு கோவை- திண்டுக்கல் இடையே வரும் 27,28,29 மற்றும் பிப்ரவரி 4,5,6 ஆம் தேதிகளில் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு.


கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு கோவை-திண்டுக்கல் இடையே 6 நாட்கள் சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திண்டுக்கல்-கோவை அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுக் கடந்த 2015இல் இருந்து ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதில் பயணிகள் வசதிக்காக சீசன் சமயங்களில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

பலகட்ட போராட்டத்திற்குப் பின் பொங்கல் பண்டிகைக்காகக் கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது பயணிகளிடையே வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து தைப்பூச விழா பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

விழாவை முன்னிட்டு பழனிக்குப் பாதயாத்திரையாக ஆயிரக்கணக்காகப் பக்தர்கள் செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் சொந்த ஊருக்குப் பேருந்துகளில் திரும்புகின்றனர். அப்போது உடுமலை, பொள்ளாச்சி, கோமங்கலம் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உட்பட்ட பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.

பழனியிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை கோமங்கலம் போன்ற இடங்களில் நிற்பதில்லை. இதனால் பொங்கலுக்கு விடப்பட்ட சிறப்பு ரயில் தைப்பூசம் வரை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. கோரிக்கையை ஏற்ற தென்னக ரயில்வே கோவை-திண்டுக்கல் இடையே 6நாட்கள் சிறப்பு ரயில் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் 27,28,29 மற்றும் பிப்ரவரி 4,5,6 ஆம் தேதிகளில் இந்த முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் கோவை- திண்டுக்கல் இடையே இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது பயணிகள் மற்றும் பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...