திருப்பூரில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் - விபத்தில் கல்லூரி மாணவி பலி

திருப்பூரில் மது போதையில் ஷேர்ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தார். பொதுமக்களிடம் வசமாகச் சிக்கிக் கொண்டதால் மயக்கம் வந்தது போல் நாடகமாடிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் கைது.



திருப்பூர்: மதுபோதையில் ஷேர் ஆட்டோவை இயங்கிய போது ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி பலியானார்.

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன்-சங்காயி தம்பதி. இவர்களது இரண்டாவது மகள் ஜனனி, சிக்கண்ணா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன், ஆட்டோ ஓட்டுநர் குணசேகரன் என்பவரின் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

ஹவுசிங் யூனிட் என்ற இடத்தில் ஆட்டோ சென்றபோது, எதிரே போட்டிப் போட்டுக் கொண்டு வந்த மூன்று ஆட்டோக்களில் ஒரு ஷேர் ஆட்டோ, குணசேகரனின் ஆட்டோ மீது மோதியது. இதில் இரண்டு ஆட்டோக்களும் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த நான்கு பேரும் காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடைய கல்லூரி மாணவி ஜனனி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய ஷேர் ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் விசாரிக்கையில், அவர் குடிபோதையில் ஆட்டோவை போட்டிப் போட்டுக் கொண்டு ஆட்டோவை ஓட்டியது தெரியவந்தது.



இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாகத் தாக்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருப்பூர் பூத்தார் தியேட்டர் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் சின்ன துரையை கைது செய்து திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

குடிபோதையில் ஷேர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தி, கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...