ஊட்டியில் தேசிய வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர் தினம் கொண்டாட்டம்.
நீலகிரி: ஊட்டியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடபட்டு வருகிறது. அதன் படி நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக உதகையில் இன்று 13ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடபட்டது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் மகளீர் சுய உதவி குழுவினர் என 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றனர்.

பின்னர் அங்கு நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் ஆகியோர் மாவட்டத்தின் மிக மூத்த வாக்காளர்களாக இருந்து வரும் 90வயதுக்கும் மேலான தோடர், இருளர், பனியர் பழங்குடியின தம்பதியினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் வாக்காளர் தினம் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கபட்டன.
ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடபட்டு வருகிறது. அதன் படி நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக உதகையில் இன்று 13ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடபட்டது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் மகளீர் சுய உதவி குழுவினர் என 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றனர்.
பின்னர் அங்கு நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் ஆகியோர் மாவட்டத்தின் மிக மூத்த வாக்காளர்களாக இருந்து வரும் 90வயதுக்கும் மேலான தோடர், இருளர், பனியர் பழங்குடியின தம்பதியினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் வாக்காளர் தினம் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கபட்டன.