ஊட்டியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

ஊட்டியில் தேசிய வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர் தினம் கொண்டாட்டம்.


நீலகிரி: ஊட்டியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடபட்டு வருகிறது. அதன் படி நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக உதகையில் இன்று 13ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடபட்டது.



இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் மகளீர் சுய உதவி குழுவினர் என 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றனர்.



பின்னர் அங்கு நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் ஆகியோர் மாவட்டத்தின் மிக மூத்த வாக்காளர்களாக இருந்து வரும் 90வயதுக்கும் மேலான தோடர், இருளர், பனியர் பழங்குடியின தம்பதியினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



பின்னர் வாக்காளர் தினம் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கபட்டன.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...