தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் ஏற்பு.
கோவை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரக அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் தினத்தினையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களிடையே நடத்தப்பட்ட பாட்டுப்போட்டி, சுவர் ஓவியப்போட்டி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்வு தரவு உள்ளீட்டாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரக அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் தினத்தினையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களிடையே நடத்தப்பட்ட பாட்டுப்போட்டி, சுவர் ஓவியப்போட்டி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்வு தரவு உள்ளீட்டாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.