உடுமலை சின்னவீரன்பட்டி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா

உடுமலை சின்ன வீரன் பட்டியில் நாளை கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பெண்கள் வழிபாடு.


திருப்பூர்: உடுமலை அருகே சின்னவீரன்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில்களில் நன்னீராட்டு பெருவிழா நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டியில் பல ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பேரூர் சாந்த லிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இன்று சின்னவீரன்பட்டி காளியம்மன் கோவிலிலிருந்து முக்கிய வீதி வழியாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரியமான வாத்தியத்துடன் முளைப்பாரி, தீர்த்த கலசங்கள் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.



பின்னர் விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...