உடுமலை சின்னவீரன்பட்டி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா

உடுமலை சின்ன வீரன் பட்டியில் நாளை கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பெண்கள் வழிபாடு.


திருப்பூர்: உடுமலை அருகே சின்னவீரன்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில்களில் நன்னீராட்டு பெருவிழா நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டியில் பல ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பேரூர் சாந்த லிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இன்று சின்னவீரன்பட்டி காளியம்மன் கோவிலிலிருந்து முக்கிய வீதி வழியாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரியமான வாத்தியத்துடன் முளைப்பாரி, தீர்த்த கலசங்கள் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.



பின்னர் விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...