உடுமலையில் காரை வழிமறித்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் - 4 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கத்தில் காரை வழிமறித்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


திருப்பூர்: கோவை அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது45). இவர் நேற்று முன்தினம் உடுமலை அருகே ருத்ராபாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை பார்த்துவிட்டு, தனது தம்பி முறையான தேவேந்திரனுடன் காரில் கோவை திரும்பிக்கொண்டு இருந்தார்.

குமரலிங்கம் பகுதியில் ஒரு பேக்கரி முன்பு வந்தபோது வேகமாக பைக்கில் வந்த 4 பேர் கார் முன்பு பைக்கை நிறுத்தி வழிமறித்து உள்ளனர். இதையடுத்து செண்பகவள்ளியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.



மேலும், செங்கல்லால் கார் கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பினர். இதுகுறித்து செண்பகவள்ளி அளித்த புகாரின்பேரில், குமரலிங்கத்தை சேர்ந்த கர்ணன் (வயது42), ஐயப்பன் (வயது42), திவாகர் (வயது26), இடுவாயை சேர்ந்த மணிகண்டன் (வயது28) ஆகிய 4 பேர் மீது குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...