மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் - அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கோவை மேயர்!

கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி மேயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெற்றது.



இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் மேயரிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர்.



அதன்படி, மேற்கு மண்டலத்தில் 2 மனுக்கள், வடக்கு மண்டலத்தில் 2 மனுக்கள், தெற்கு மண்டலத்தில் 5 மனுக்களும், கிழக்கு மண்டலத்தில் 8 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 14 மனுக்கள் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இரண்டு மனுக்கள் என 33 மனுக்கள் பெறப்பட்டன.



இந்த புகார் மனுக்களில் உள்ள கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...