கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி மேயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெற்றது.

இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் மேயரிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர்.

அதன்படி, மேற்கு மண்டலத்தில் 2 மனுக்கள், வடக்கு மண்டலத்தில் 2 மனுக்கள், தெற்கு மண்டலத்தில் 5 மனுக்களும், கிழக்கு மண்டலத்தில் 8 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 14 மனுக்கள் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இரண்டு மனுக்கள் என 33 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த புகார் மனுக்களில் உள்ள கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.

இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் மேயரிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர்.
அதன்படி, மேற்கு மண்டலத்தில் 2 மனுக்கள், வடக்கு மண்டலத்தில் 2 மனுக்கள், தெற்கு மண்டலத்தில் 5 மனுக்களும், கிழக்கு மண்டலத்தில் 8 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 14 மனுக்கள் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இரண்டு மனுக்கள் என 33 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த புகார் மனுக்களில் உள்ள கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.