கோவை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கு - கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே லட்சுமி நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகரில் கடந்த பத்தாம் தேதி கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு நபர்கள், அங்கு தனியாக இருந்த வித்யா என்ற பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் செயினை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கருப்புசாமி பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று மாலை பழைய சோதனை சாவடி முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பநாதன் மற்றும் லியோஜெபிரியன் என்பது தெரியவந்தது.

இருவரும் கோவையில் உள்ள மெரைன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும், கிணத்துக்கடவு லட்சுமி நகர் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், லட்சுமிநகர் பகுதியில் நோட்டமிட்ட அவர்கள், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றதும் விசாரணையில் உறுதியானது.



இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஐந்து பவுன் செயின் மற்றும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.



கைது செய்யபட்ட இருவரையும் போலீசார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...