கோவை மாநகராட்சி சார்பில் சிறந்த கவுன்சிலர்களுக்கு விருது

பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் உறுப்பினர்களுக்குக் குடியரசு தினத்தன்று சிறந்த கவுன்சிலர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு.


கோவை: கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு ஆற்றும் சேவைகளைப் பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும், சிறந்த மாமன்ற உறுப்பினர் விருது வழங்கி மேயர் கல்பனா ஊக்குவிக்க உள்ளார்.

கோவை மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள் உள்ளாட்சி பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். குடிநீர் விநியோகம், தடையில்லா மின்சாரம், பொதுவெளி தூய்மை, சாலை கட்டமைப்பு, கழிவு நீர் வடிகால், பூங்கா மேம்பாடு உள்ளிட்ட ஏராளமான பணிகளைச் செய்துவருகின்றனர். இது மட்டுமின்றி பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்களுக்கு ஆற்றும் சேவைகளைப் பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும், சிறந்த கவுன்சிலர் உறுப்பினர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாமன்ற கூட்டத்திற்கு வருகை புரிதல், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குதல், பொது மக்களுடைய நன்மதிப்பு, வரி வசூலிப்பு பங்களிப்பு, மண்டல அளவில் அவர்களின் செயல்பாடு எனப் பல கட்ட வகையில் அளவுகோல்களைக் கொண்டு அதற்கு மொத்தம் 50 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி கவுன்சிலர்கள் ஜி.வி. நவீன்குமார் (வார்டு 5), ஆ.ராதாகிருஷ்ணன் (வார்டு 18), செ.சரண்யா (வார்டு 30), எம்.கே.பிரவின்ராஜ (வார்டு 42), பிரபா ரவீந்திரன் (வார்டு 48), எ.அன்னக்கொடி (வார்டு 49) இலக்குமி இளஞ்செல்வி (வார்டு 52), கே.செல்வராஜ் (வார்டு 72), இ.அகமது கபீர் (வார்டு 86), ரா.கார்த்திகேயன் (வார்டு 100) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் குடியரசு தினத்தன்று மாநகராட்சி மேயர் கல்பனா விருதுகளை வழங்கி ஊக்குவிக்கவுள்ளார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...