'வேலை, சம்பளம் என்பதை தாண்டி மனிதத்தையும், மனிதநேயத்தையும் படிக்க வேண்டும்..!' - கோவையில் எம்பி திருமாவளவன் அறிவுரை

படிக்காமல் கூட வேலை வாய்ப்பு மற்றும் சம்பாதிக்க முடியும். ஆனால் நாகரீகத்தை வளர்த்துக் கொள்ளக் கல்வி முக்கியம் என்று கோவையில் நடந்த தனியார் கல்லூரி விழாவில் விசிக எம்பி தொல் திருமாவளவன் பேச்சு.


கோவை: மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள நைட்டிங்கேல் தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்று செவிலியர் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினர்.



இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தொல் திருமாவளவன், பெரியார் பிறந்து நூறு ஆண்டுகள் வாழ்ந்த இம்மண்ணில் இறுதி மூச்சு வரையில் பாடுபட்டும் கூட உளவியல் நிலவுகிறது எனச் சொன்னால், படித்து என்ன பயன்? பேராசிரியர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் இருந்து என்ன பயன்? மனித நேயத்தை உணராதவன் படித்து என்ன பொருள்? என்ற கேள்வி தான் எழுகிறது.

வேலை, சம்பளம் என எதிர்பார்ப்பது சரிதான், ஆனால் அதனைத் தாண்டி மனிதத்தையும் மனித நேயத்தையும் படிக்க வேண்டும். கல்வி பெற மனித உறவுகள் மேம்பட வேண்டும், சகோதரத்துவத்தை வளர்க்கப் பயன்பட்டால் தான் அது கல்வி, படிக்காமல் கூட வேலை வாய்ப்பை பெற முடியும், சம்பாதிக்க முடியும்.

நாகரீகத்தை வளர்த்து கொள்ள தான் கல்வி தேவை, மனித நேயத்தைப் பெருக்கி கொள்ள தான் கல்வி தேவை. மனித உறவுகளை மேம்படுத்தத் தான் கல்வி தேவை. ஒவ்வொரு படியிலும் ஒரு உலகத்தைப் பார்க்கிறோம். அடிப்படையில் உலகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள மனித உறவு மேம்படுத்துகிற கல்வி முக்கியம், என்றார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...