'வேலை, சம்பளம் என்பதை தாண்டி மனிதத்தையும், மனிதநேயத்தையும் படிக்க வேண்டும்..!' - கோவையில் எம்பி திருமாவளவன் அறிவுரை

படிக்காமல் கூட வேலை வாய்ப்பு மற்றும் சம்பாதிக்க முடியும். ஆனால் நாகரீகத்தை வளர்த்துக் கொள்ளக் கல்வி முக்கியம் என்று கோவையில் நடந்த தனியார் கல்லூரி விழாவில் விசிக எம்பி தொல் திருமாவளவன் பேச்சு.


கோவை: மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள நைட்டிங்கேல் தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்று செவிலியர் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினர்.



இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தொல் திருமாவளவன், பெரியார் பிறந்து நூறு ஆண்டுகள் வாழ்ந்த இம்மண்ணில் இறுதி மூச்சு வரையில் பாடுபட்டும் கூட உளவியல் நிலவுகிறது எனச் சொன்னால், படித்து என்ன பயன்? பேராசிரியர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் இருந்து என்ன பயன்? மனித நேயத்தை உணராதவன் படித்து என்ன பொருள்? என்ற கேள்வி தான் எழுகிறது.

வேலை, சம்பளம் என எதிர்பார்ப்பது சரிதான், ஆனால் அதனைத் தாண்டி மனிதத்தையும் மனித நேயத்தையும் படிக்க வேண்டும். கல்வி பெற மனித உறவுகள் மேம்பட வேண்டும், சகோதரத்துவத்தை வளர்க்கப் பயன்பட்டால் தான் அது கல்வி, படிக்காமல் கூட வேலை வாய்ப்பை பெற முடியும், சம்பாதிக்க முடியும்.

நாகரீகத்தை வளர்த்து கொள்ள தான் கல்வி தேவை, மனித நேயத்தைப் பெருக்கி கொள்ள தான் கல்வி தேவை. மனித உறவுகளை மேம்படுத்தத் தான் கல்வி தேவை. ஒவ்வொரு படியிலும் ஒரு உலகத்தைப் பார்க்கிறோம். அடிப்படையில் உலகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள மனித உறவு மேம்படுத்துகிற கல்வி முக்கியம், என்றார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...