தபெதிக பொதுச்செயலாளர் மனைவி மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி

தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனைவி மறைவுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.


கோவை: தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் மனைவி மறைவுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனைவி வசந்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.



இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காந்திபுரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.



மேலும் மறைந்த வசந்தி அவரது புகைப்படத்திற்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் சுசி கலையரசன் உட்படப் பலர் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...