தாராபுரத்தில் சாலையில் திடீரென விழுந்த மின்கம்பம் - போக்குவரத்து பாதிப்பால் அவதி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: தாராபுரம் - அலங்கியம் ரவுண்டானா செல்லும் சாலையில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் இருந்த மின்கம்பத்தில் இன்பஅரசு, மற்றும் பிரகாஷ் ஆகியோர், ஏறி அருகில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக முயற்சித்துள்ளனர்.



அப்போது, திடீரென அந்த மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் கம்பத்தின் மேலே இருந்த இரண்டு பணியாளர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். அந்தநேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



மின் கம்பம் சாய்ந்ததால், 500 மீட்டா் தொலைவுக்கு சாலையின் இரு புறங்களிலும் மின்சார ஒயா்கள் தொங்கிக் கொண்டிருந்தன.



இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் கீழே விழுந்த மின் பணியாளர்களை மீட்டெடுத்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோ மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



குடியிருப்புப் பகுதியில் நடப்பட்டிருந்த மின்கம்பம் திடீரென உடைந்து விழுந்ததால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...