தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வால்பாறை தொழிலாளர்கள் கோரிக்கை.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி வளாகம் முன்பு மத்திய அரசைக் கண்டித்து ஏஐடியூசி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்குத் தொழிற்சங்க பொதுச்செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.

அப்போது, அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவித்த புதிய ஊதியமான ரூ.425.40 பைசாவைத் தர மறுக்கும் நிர்வாகத்தைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை கண்டித்தும், பென்ஷன் பணத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி வழங்கவும்.
பதிவு செய்துள்ள கட்டிடத் தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்திற்குத் தொழிற்சங்க பொதுச்செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.
அப்போது, அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவித்த புதிய ஊதியமான ரூ.425.40 பைசாவைத் தர மறுக்கும் நிர்வாகத்தைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை கண்டித்தும், பென்ஷன் பணத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி வழங்கவும்.
பதிவு செய்துள்ள கட்டிடத் தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.