கோவையில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் ஆணையம் சிறப்புற நடத்திட பார்வையாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் திருதயானந்த் கட்டாரியா தகவல்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் திருதயானந்த் கட்டாரியா தலைமையில் நடைபெற்றது.



இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கூட்டுறவுச் சங்க தேர்தல் செயலாளர்/கூடுதல் பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவுச் சங்கத்தின் இணை பதிவாளர் பார்த்திபன், கூட்டுறவு சங்க பதிவாளர் கண்ணப்பராஜா மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திருதயானந்த் கட்டாரியா, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் 15 இதர செயற்பதிவாளர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் மொத்தம் 23,149 அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 2018ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த தேர்தலில் முதற்கட்டம் முதல் நிலையில் தேர்தல் முடிவற்று 02.04.2023 அன்று 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுறும் சுமார் 4,684 சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.



இவை தவிர, புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள், செயலாட்சியர் கட்டுப்பாட்டிலுள்ள சங்கங்கள் போன்று இதர வகை சங்கங்களுக்கும் ஆணையம் தேர்தல் நடத்தவுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டத்தில் வரும் 23 மற்றும் 4 நிலைகளிலுள்ள சுமார் 13,784 சங்கங்களுக்கான 5 ஆண்டுகள் பதவிக்காலம் ஆகஸ்ட் 2023-ல் முடிவடைவதால் இவற்றுக்கு ஆகஸ்ட் 2023-ல் தேர்தல் நடத்தப்படும். கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களைச் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் ஆணையம் சிறப்புற நடத்திடப் பார்வையாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிச் சிறந்த முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...