கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாத காரணத்தால், டாஸ்மாக் கடை உட்பட 40 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு கடை அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை நகராட்சி கடைகளுக்கு வாடகை மாதம் தோறும் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம், கடைகளுக்கான வாடகை உயர்த்தியதால் கடைக்காரர்கள் வாடகை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
நகராட்சி நிர்வாகம் பலமுறை வாடகை கட்டுவதற்கு நோட்டீஸ் கொடுத்தும் கடை உரிமையாளர்கள் வாடகை கட்டாததால், நீண்ட நாள் கடை வாடகை கட்டாமல் இருந்த 40 கடைகள் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டன.
அரசு மதுபான கடை உட்பட 40 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.