வாடகை விவகாரம் - வால்பாறை டாஸ்மாக் கடை உட்பட 40 கடைகளுக்கு சீல்

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாத காரணத்தால், டாஸ்மாக் கடை உட்பட 40 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவிட்டார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு கடை அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை நகராட்சி கடைகளுக்கு வாடகை மாதம் தோறும் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம், கடைகளுக்கான வாடகை உயர்த்தியதால் கடைக்காரர்கள் வாடகை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.



நகராட்சி நிர்வாகம் பலமுறை வாடகை கட்டுவதற்கு நோட்டீஸ் கொடுத்தும் கடை உரிமையாளர்கள் வாடகை கட்டாததால், நீண்ட நாள் கடை வாடகை கட்டாமல் இருந்த 40 கடைகள் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டன.



அரசு மதுபான கடை உட்பட 40 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...