கோவை புரூக் பீல்டு சாலை மாதிரி ரவுண்டானாவில் திடீர் ஆய்வு!

கோவை புரூக் பீல்டு சாலையில் மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதைத் துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு.


கோவை: கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் பொதுமக்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் விரைவாகச் சாலையைக் கடக்கச் சோதனை முயற்சியாக மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டது.



கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் முயற்சியாகக் கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவு சார்பாகச் சோதனை முயற்சியாக, சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து மாதிரி ரவுண்டானா அமைத்தனர்.

அதற்கான சோதனை ஓட்டம் மாலை 4 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் கிழக்கு திருவேங்கடசாமி சாலை வழியாக புரூக் பீல்டு செல்லும் வாகன ஓட்டிகள், இடது புறமாகத் திரும்பி சிந்தாமணி ரவுண்டானா வழியாக புரூக் பீல்டு சாலைக்குச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



மேலும் கிழக்கு திருவேங்கடசாமி சாலையிலிருந்து காமராஜபுரம் வழியாக புரூக் பீல்டு சாலை செல்லும் பாதை தடை செய்யப்பட்டுள்ளது. அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பயணம் மேற்கொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்குப் பொதுமக்களின் ஆதரவு அளிக்குமாறு போக்குவரத்துத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



இந்த மாதிரி ரவுண்டானாவை துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...