கோவை புரூக் பீல்டு சாலை மாதிரி ரவுண்டானாவில் திடீர் ஆய்வு!

கோவை புரூக் பீல்டு சாலையில் மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதைத் துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு.


கோவை: கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் பொதுமக்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் விரைவாகச் சாலையைக் கடக்கச் சோதனை முயற்சியாக மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டது.



கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் முயற்சியாகக் கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவு சார்பாகச் சோதனை முயற்சியாக, சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து மாதிரி ரவுண்டானா அமைத்தனர்.

அதற்கான சோதனை ஓட்டம் மாலை 4 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் கிழக்கு திருவேங்கடசாமி சாலை வழியாக புரூக் பீல்டு செல்லும் வாகன ஓட்டிகள், இடது புறமாகத் திரும்பி சிந்தாமணி ரவுண்டானா வழியாக புரூக் பீல்டு சாலைக்குச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



மேலும் கிழக்கு திருவேங்கடசாமி சாலையிலிருந்து காமராஜபுரம் வழியாக புரூக் பீல்டு சாலை செல்லும் பாதை தடை செய்யப்பட்டுள்ளது. அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பயணம் மேற்கொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்குப் பொதுமக்களின் ஆதரவு அளிக்குமாறு போக்குவரத்துத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



இந்த மாதிரி ரவுண்டானாவை துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...