இயற்கை விழிப்புணர்வுக்காக ஊட்டியில் மாணவர்கள் கல்வி சுற்றுலா

நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் ஊட்டிக்கு ஒருநாள் இயற்கை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.


நீலகிரி: இயற்கை குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கேர்ண்ஹில் காப்புக்காடு, மற்றும் பழங்குடியினர் ஆய்வு மையம் எம் பாலடா ஆகிய இடங்களுக்குத் தேசிய பசுமை படை சார்பாகப் பள்ளி மாணவர்களை ஒருநாள் இயற்கை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது.



இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களை அழைத்துச் சென்று காடுகள் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்க்கை முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அப்போது, மாணவர்கள் இயற்கை கல்விச் சுற்றுலாவை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு இயற்கை குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமரவேலு, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் முக்கியத்துவம் அறிந்து கொள்ளவும், இங்கு வாழும் பழங்குடியின மக்களின் கலாச்சாரம், நீலகிரிக்கு உரித்தான தாவரங்கள், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள இது போன்ற சுற்றுலா அமையும் என்றார்.

வனவர் மேகர் நிஷா பேசுகையில், பிளாஸ்டிக் வனப்பகுதியில் வீசி எறிவதும், வனவிலங்குகளுக்கு உணவளிப்பதும் தவிர்க்க வேண்டும் என்றார்.

இதேபோல் நீலகிரி மாவட்ட இயற்கை விவசாய செயலாளர் ராமதாஸ் பேசுகையில், அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளால் சோலை வனப்பகுதிகளும் மூலிகை மற்றும் அரிய தாவரங்களும் அழிந்து வரும் அபாயத்தில் உள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு வனப்பகுதியில் நீர் நடைப் பயிற்சி, பட்டாம்பூச்சி, பறவைகள், தாவரங்கள் கண்டறிதல், தியானம், பழங்குடியினர் பாரம்பரிய அறிவு கற்பிக்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வே.சிவதாஸ் செய்திருந்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...