குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி வீடியோ வைரல்

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை உலா வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நீலகிரி: சிறுத்தை நடமாட்டம் இருந்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் வனத்துறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடிக் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில் ராணுவ கல்லூரியை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ராணுவ கல்லூரிக்குள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.



இந்த காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைவரலாகி வருகின்றன.



வனத்துறைக்கு ராணுவ கல்லூரியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ கல்லூரிக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...