இங்கிலாந்து நாட்டவரின் உடமையை மீட்டுத் தந்த தமிழக போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்


நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ  கோவையில் இருந்து உதகைக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், அரசு பேருந்து பயணத்தின் போது அத்தம்பதியினர் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை தவறவிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் குன்னூர் காவல்துறையிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே, இங்கிலாந்து தம்பதியினர் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர் இரகுநாதன் மற்றும் நடத்துநர் செல்வராஜ் ஆகியோர் பணம் மற்றும் ஆவணங்களை மேத்யூ ரைட் மற்றும் ஜசக்கோ-விடம்  ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து தம்பதியினர் மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ, காவல்துறை மற்றும் குன்னூர் போக்குவரத்துத் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...