வைக்கம் பெரியார் நினைவ புனரமைப்புப் பணிகள் - கேரளாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆய்வு!

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.


கோவை: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில், தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட வெற்றியை நினைவு கூறும் 70 சென்ட் பரப்பளவில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நினைவகமானது, 66.09 சதுர மீட்டர் அருங்காட்சியக கட்டிடமும், 84.20 சதுர மீட்டர் நூலக கட்டிடமும், சிறுவர் விளையாட்டு பூங்காவும், இரு பாலருக்கான கழிவறை கட்டிடமும், வளாகத்தினை சுற்றி சுற்றுச்சுவர் ஆகியவற்றுடன் அமையப் பெற்றுள்ளது. மேலும், தந்தை பெரியார் அமர்ந்த நிலையில் உள்ள திருவுருவச் சிலையும் இடம்பெற்றுள்ளது.



தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக திகழும் இந்நினைவகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, போராட்டங்கள், பெரியாரைச் சந்தித்த தலைவர்கள் ஆகிய புகைப்படங்களும் தமிழ்,மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெரியார் பங்கேற்ற போராட்டங்கள் மற்றும் ஆற்றிய பணிகள் குறித்த தொகுப்பும் இடம்பெற்றுள்ளன.



தந்தை பெரியாரின் பிறந்த நாளை (செப்டம்பர்- 17) சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து, இந்நினைவகத்தில் கேரளா அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு சமூக நீதிநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



இதனை தொடர்ந்து, 1984 ஆம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு 1994 ஆம் வருடத்தில் திறப்பு விழா செய்யப்பட்ட இந்நினைவகத்தினை புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில், இந்நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலருக்கு அறிவுறுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...