கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
கோவை: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில், தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட வெற்றியை நினைவு கூறும் 70 சென்ட் பரப்பளவில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நினைவகமானது, 66.09 சதுர மீட்டர் அருங்காட்சியக கட்டிடமும், 84.20 சதுர மீட்டர் நூலக கட்டிடமும், சிறுவர் விளையாட்டு பூங்காவும், இரு பாலருக்கான கழிவறை கட்டிடமும், வளாகத்தினை சுற்றி சுற்றுச்சுவர் ஆகியவற்றுடன் அமையப் பெற்றுள்ளது. மேலும், தந்தை பெரியார் அமர்ந்த நிலையில் உள்ள திருவுருவச் சிலையும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக திகழும் இந்நினைவகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, போராட்டங்கள், பெரியாரைச் சந்தித்த தலைவர்கள் ஆகிய புகைப்படங்களும் தமிழ்,மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெரியார் பங்கேற்ற போராட்டங்கள் மற்றும் ஆற்றிய பணிகள் குறித்த தொகுப்பும் இடம்பெற்றுள்ளன.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை (செப்டம்பர்- 17) சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து, இந்நினைவகத்தில் கேரளா அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு சமூக நீதிநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, 1984 ஆம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு 1994 ஆம் வருடத்தில் திறப்பு விழா செய்யப்பட்ட இந்நினைவகத்தினை புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில், இந்நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலருக்கு அறிவுறுத்தினர்.
இந்நினைவகமானது, 66.09 சதுர மீட்டர் அருங்காட்சியக கட்டிடமும், 84.20 சதுர மீட்டர் நூலக கட்டிடமும், சிறுவர் விளையாட்டு பூங்காவும், இரு பாலருக்கான கழிவறை கட்டிடமும், வளாகத்தினை சுற்றி சுற்றுச்சுவர் ஆகியவற்றுடன் அமையப் பெற்றுள்ளது. மேலும், தந்தை பெரியார் அமர்ந்த நிலையில் உள்ள திருவுருவச் சிலையும் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக திகழும் இந்நினைவகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, போராட்டங்கள், பெரியாரைச் சந்தித்த தலைவர்கள் ஆகிய புகைப்படங்களும் தமிழ்,மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெரியார் பங்கேற்ற போராட்டங்கள் மற்றும் ஆற்றிய பணிகள் குறித்த தொகுப்பும் இடம்பெற்றுள்ளன.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை (செப்டம்பர்- 17) சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து, இந்நினைவகத்தில் கேரளா அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு சமூக நீதிநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, 1984 ஆம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு 1994 ஆம் வருடத்தில் திறப்பு விழா செய்யப்பட்ட இந்நினைவகத்தினை புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில், இந்நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலருக்கு அறிவுறுத்தினர்.