நீலகிரி கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி முதியவர் பலி - பொதுமக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரிடன் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. பகல் நேரங்களிலேயே கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள் அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று மாலை ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட டெல்லோஸ் பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி (வயது65) என்ற முதியவர் வழக்கம்போல தனது வீட்டிற்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று அவரை கடுமையாக தாக்கியது.



இதில், சம்பவ இடத்திலேயே முதியவர் சிவனாண்டி உயிரிழந்தார். இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று முதியவர் உடலை மீட்க முயன்றனர். அப்போது, அங்கு கூடிய பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் மக்களிடம் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் மகனுக்கு அரசு வேலை மற்றும் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி சோலார் மின்வெலிகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, முதியவரின் உடலை கூடலூர் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...