'ஆளுநர் பதவியே வேண்டாம்..!' - திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ தலைவர் நெல்லை முபாரக் ஆவேசம்

தமிழகத்திற்கு ஆளுநர் ரவி மட்டுமல்ல, ஆளுநர் பதவியே வேண்டாம் என்ற அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: எஸ் டி பி ஐ கட்சியின் கொங்கு மண்டல மாநாடு திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும். தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்பில் தமிழருக்கு 7.5 சதவீதம் வழங்க ஆணையிட வேண்டும். கொங்கு மண்டலத்தில் நலிந்துவரும் தொழில் வளத்தை பாதுகாத்திட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறிக் கொள்ளும் திமுக. அதே பணியை மேற்கொள்ளும் தங்கள் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதற்கு அலைக்கழித்தது ஏன் என தெரியவில்லை. ஆளுநரை வெளியேறுங்கள் என முதலில் குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்கியது எஸ்டிபிஐ கட்சி. பாஜகவை எதிர்க்க தமிழகத்தில் எவ்வாறு அனைத்து ஜனநாயக கட்சிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து வீழ்த்தியதோ, அதே வழிமுறையை இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஜனநாயகத்திற்கு எதிரான சித்தாந்தத்தை அமல்படுத்த அதிகாரிகள் முயல்கின்றனர். இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். தமிழக அரசைப் பொறுத்தவரையில், ஆளுநர் ரவி வெளியேற்றப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, ஆளுநர் பதவியே வேண்டாம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.



மாநாட்டில் பேசிய திருமுருகன் காந்தி , கொங்கு இளைஞர் பேரவை தனியரசு உள்ளிட்டார் எஸ் டி பி ஐ கட்சியின் கொங்கு மண்டல மாநாட்டின் அனுமதிக்காக, அவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தவறு எனவும், அதிமுக -பாஜகவை தோற்கடிக்க மாநிலம் முழுவதும் ஜனநாயக அமைப்புகள் முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக தற்போது திமுக ஆட்சி அமைத்திருப்பதாகவும், அதே திமுக தவறு செய்தால், அதனை விமர்சிக்கவும் தயங்க கூடாது எனவும் பேசினர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...