செட்டிபாளையத்தில் நிலம் அபகரிக்க முயன்ற திமுக கவுன்சிலரின் கணவர் மீது வழக்கு பதிவு

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள 4.45 ஏக்கர் நிலத்தைப் போலி பத்திரம் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில் திமுக கவுன்சிலரின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: போத்தனூர் அருகே நில மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட திமுக கவுன்சிலரின் கணவரான ரவிக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் அடுத்த கஞ்சிகோணம்பாளையம் இளங்கோ வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (37), இவருக்கு செட்டிபாளையம் சாலையில் 4.45 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி. இந்நிலையில் தனது நிலத்தைச் சிலர் அபகரித்துள்ளதாக செட்டிபாளையம் போலீசில் ராமச்சந்திரன் புகார் அளித்தார்.

மேலும் கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தடங்கல் மனு அளித்திருந்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலர் சித்ராவின் கணவரும், திமுக கிளைச் செயலாளருமான ரவிக்குமாரின் திட்டப்படி, லட்சுமணன் என்பவர் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.

மேலும் லட்சுமணனின் தந்தையின் பெயரும் கிருஷ்ணசாமி என்பதால் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பீளமேடு காவல் நிலையத்தில் மேற்குறிப்பிட்ட இடத்தின் பத்திரம் தொலைந்து விட்டதாக லட்சுமணன் புகார் அளித்துள்ளார். மேலும் அங்கிருந்து ஆவணத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை எனச் சான்று பெற்று அதனைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்து, அங்கிருந்த ராமச்சந்திரனின் பத்திரத்துக்கான நகலைப் பெற்றுள்ளார்.

மேலும் இந்த இடத்தை ரவிக்குமாரின் பெயருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதை அடுத்து காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் லட்சுமணனை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ரவிக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...