உடுமலை அருகே சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து கிராம மக்கள்

குடிமங்கலம் அருகே சலங்கை மாடுகளுக்குப் பொதுமக்கள் பால், பழம் வைத்து பூஜை செய்து வழிபாடு.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமங்கள் தோறும் இசைக்கேற்ப ஆடும் சலங்கை மாடுகளுக்குக் கிராம மக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இசை கேட்ப ஆடும் வகையில், மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, கோவிலுக்குச் சொந்தமானது என்பதைக் குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்ற குறிகள் காணப்படுகின்றன.

மாட்டுப்பொங்கல் அன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளைக் கையில் வைத்து ஆள் கொண்ட பால கோவிலுக்குக் கொண்டு சென்று ஆடுகின்றனர்.



பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்குக் கொண்டு வந்து பொதுவான இடத்தில் அல்லது கோவில் பகுதியில் வைத்து பால், பழம் பொங்கல், வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்கள் தொடர்ந்து பாடும் பொழுது சலங்கை மாடு தானாகவே சென்று பால், பழம், பொங்கலைச் சாப்பிடுவது சிறப்பாகக் கருதப்படுகின்றது.



உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் குடிமங்கலம் அருகே பண்ணைக்கிணற்றில் கிராம மக்கள் பொதுஇடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...