சகோதரியிடம் கொடுத்த கடனை வசூலிக்க 80கி.மீ மூதாட்டி பயணம்

பல்லடம் அருகே 80 வயது மூதாட்டி சகோதரியிடம் கொடுத்த பணத்தை வசூலிக்க 80 கிலோமீட்டர் தனி ஆளாகப் பயணம்.


திருப்பூர்: தள்ளாத வயதில் சகோதரியிடம் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்க வந்த மூதாட்டிக்கு உணவளித்து உபசரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம் பாளையம். இப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு எதிரே 80 வயது மூதாட்டி ஒருவர் தட்டுத்தடுமாறி வந்து கோயில் அருகே அமர்வதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த மூதாட்டி சொன்ன பதில் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மூதாட்டி பெயர் பொன்னம்மாள் எனவும், 80 வயதைக் கடந்த அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கோயிலில் தூய்மை பணி செய்துகொண்டு அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் உணவு மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இரவு நேரங்களில் கோயில் அருகே உள்ள பூட்டப்பட்ட கடைகளின் முன்பு உறங்கிவிட்டு அதிகாலை எழுந்து கோயில் பணிகளைச் செய்து வருகிறார். கணவர் பழனிச்சாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிடவே தனது ஒரே மகன் மனவளர்ச்சிகுன்றிய நிலையில் சித்தூரில் இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுத்தாம் பாளையத்தில் வசித்துவரும் தனது சகோதரிக்குத் தான் சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த சேமிப்பு பணத்திலிருந்து 25 ஆயிரத்தைக் கொடுத்ததாகத் தெரிவித்தார். மேலும் கொடுத்த பணத்தைச் சகோதரியிடம் திருப்பி கேட்டபோதெல்லாம் தவணை சொல்லியே காலம் கடத்திவந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து தனியாக மூதாட்டி பொன்னம்மாள் பேருந்து ஏறி திருப்பூர் வந்து திருப்பூரிலிருந்து டவுண் பேருந்தில் சின்னக்கரைக்கு வந்த பின்பு, அங்கிருந்து ஆட்டோவில் ஆறுமுத்தாம் பாளையம் வந்துள்ளார்.

பின்னர் தனது சகோதரி வீட்டிற்குச் சென்று கொடுத்த முழு பணத்தைக் கேட்டுள்ளார். பணத்தைத் தர மேலும் கால அவகாசம் கேட்டுள்ளார் அவரது சகோதரி. இதனால் வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு கோயில் அருகே தட்டுத்தடுமாறி வந்து மூதாட்டி பொன்னம்மாள் அமர்ந்துள்ளார்.



பின்னர் அங்கு வந்த அவரது சகோதரி அவரது கையிலிருந்த 2 ஆயிரம் பணத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சாப்பாட்டையும் தட்டில் வைத்துச் சாப்பிட வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

80 வயது மூதாட்டி தனது தள்ளாத வயதில் தனது சகோதரியிடம் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டு 80 கிலோமீட்டர் தளராது வந்து வசூலிக்கச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...