சகோதரியிடம் கொடுத்த கடனை வசூலிக்க 80கி.மீ மூதாட்டி பயணம்

பல்லடம் அருகே 80 வயது மூதாட்டி சகோதரியிடம் கொடுத்த பணத்தை வசூலிக்க 80 கிலோமீட்டர் தனி ஆளாகப் பயணம்.


திருப்பூர்: தள்ளாத வயதில் சகோதரியிடம் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்க வந்த மூதாட்டிக்கு உணவளித்து உபசரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம் பாளையம். இப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு எதிரே 80 வயது மூதாட்டி ஒருவர் தட்டுத்தடுமாறி வந்து கோயில் அருகே அமர்வதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த மூதாட்டி சொன்ன பதில் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மூதாட்டி பெயர் பொன்னம்மாள் எனவும், 80 வயதைக் கடந்த அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கோயிலில் தூய்மை பணி செய்துகொண்டு அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் உணவு மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இரவு நேரங்களில் கோயில் அருகே உள்ள பூட்டப்பட்ட கடைகளின் முன்பு உறங்கிவிட்டு அதிகாலை எழுந்து கோயில் பணிகளைச் செய்து வருகிறார். கணவர் பழனிச்சாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிடவே தனது ஒரே மகன் மனவளர்ச்சிகுன்றிய நிலையில் சித்தூரில் இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுத்தாம் பாளையத்தில் வசித்துவரும் தனது சகோதரிக்குத் தான் சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த சேமிப்பு பணத்திலிருந்து 25 ஆயிரத்தைக் கொடுத்ததாகத் தெரிவித்தார். மேலும் கொடுத்த பணத்தைச் சகோதரியிடம் திருப்பி கேட்டபோதெல்லாம் தவணை சொல்லியே காலம் கடத்திவந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து தனியாக மூதாட்டி பொன்னம்மாள் பேருந்து ஏறி திருப்பூர் வந்து திருப்பூரிலிருந்து டவுண் பேருந்தில் சின்னக்கரைக்கு வந்த பின்பு, அங்கிருந்து ஆட்டோவில் ஆறுமுத்தாம் பாளையம் வந்துள்ளார்.

பின்னர் தனது சகோதரி வீட்டிற்குச் சென்று கொடுத்த முழு பணத்தைக் கேட்டுள்ளார். பணத்தைத் தர மேலும் கால அவகாசம் கேட்டுள்ளார் அவரது சகோதரி. இதனால் வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு கோயில் அருகே தட்டுத்தடுமாறி வந்து மூதாட்டி பொன்னம்மாள் அமர்ந்துள்ளார்.



பின்னர் அங்கு வந்த அவரது சகோதரி அவரது கையிலிருந்த 2 ஆயிரம் பணத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சாப்பாட்டையும் தட்டில் வைத்துச் சாப்பிட வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

80 வயது மூதாட்டி தனது தள்ளாத வயதில் தனது சகோதரியிடம் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டு 80 கிலோமீட்டர் தளராது வந்து வசூலிக்கச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...