கோவையில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை தனியார் ஓட்டலில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் 4 மாநில ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி.


கோவை: பருத்தி விளைச்சல், மற்றும் சந்தையின் போக்கு, தரம் மேம்பாடு போன்ற விஷயங்களில் தகவல் பரிமாற்றங்களைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து கொள்வது என இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில், இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு(ஐடிஎஃப்) சார்பில், ஆந்திரா, தமிழ் நாடு, குஜராத் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது.

இதில் 4 மாநிலங்களிலிருந்து 120 நூற்பாலை உரிமையாளர்கள், குறிப்பாக ஆந்திரா ஸ்பின்னிங் மில் அசோசியேஷன், தெலங்கானா ஸ்பின்னிங் மில் அசோசியேஷன், குஜராத் ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஐ.டி.எப். அமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன், ஆந்திர நூற்பாலைகள் சங்கம் சார்பில் சலபதி ராவ், தெலங்கானா நூற்பாலைகள் சங்கம் சார்பில் ஆர்.கே. அகர்வால், குஜராத் நூற்பாலைகள் சங்கம் சார்பில் ரிப்பில் படேல் மற்றும் ஐ.டி.எப்.அமைப்பின் அரவிந்த் செல்வபதி,சரவண சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டு, 4 மாநில ஜவுளித் தொழில் முனைவோரின் ஒத்துழைப்புக்கான விஷயங்களாக, கீழ்க்கண்டவை முடிவெடுக்கப்பட்டன.

அதன் விவரம் பின்வருமாறு:

பருத்தி விளைச்சல், மற்றும் சந்தையின் போக்கு, தரம் மேம்பாடு போன்ற விஷயங்களில் தகவல் பரிமாற்றங்களைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து கொள்வது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நூல் மற்றும் துணி விற்பனையில் ஏற்படும் மாற்றங்களையும், தேவை சம்பந்தமான மாறுதல்களையும் பகிர்ந்து கொள்வது.

உற்பத்திக்குக்கான அளவுகோல்கள், உற்பத்தி செலவுகளைக் குறைக்கும் முயற்சிகள், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளக் குழுக்களை அமைப்பது.

நூற்பாலைகளின் அடுத்த கட்ட முயற்சியாக, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு புது முதலீடுகள் செய்வதற்கான அறிவுசார் வழிமுறைகளை ஆராய்வது.

இந்திய மற்றும் ஏற்றுமதி ஜவுளி சந்தையில் ஏற்படும் மாற்றங்களை மாதாந்திர ஆன்லைன் கூட்டங்கள் நடத்துவதன் மூலம், சரியான புரிதலைக் கொண்டு வருவது.

மேலும், இந்த கூட்டத்தில் தற்போதைய ஜவுளித்தொழில் நிலையைப் பற்றியும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், போட்டித் திறனை வளர்க்க எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைந்து இருக்கும் பஞ்சு விலை, குறைந்துள்ள சரக்கு போக்குவரத்து கட்டணங்கள், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யாத நிலையில் அவர்களுடைய சரக்கு கையிருப்பு குறைந்துள்ள நிலை, வளர்ந்த நாடுகளில் பணவீக்கம் குறைந்து வருவது, சீனாவின் பொருளாதாரம் முற்றிலுமாக கோவிட்டை எதிர்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்புதல், போன்ற சாதகமான அம்சங்கள் காரணமாக இந்தாண்டில், ஜவுளி வர்த்தகம் இயல்பு நிலையை நோக்கித் திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...