உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை

உடுமலை- மூணாறு சாலையில், யானைகள் சுற்றி வருவதால் அவற்றை தொந்தரவு செய்தால் அபராதம் உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை.


திருப்பூர்: மூணாறு செல்லும் சாலையில் யானைக்கூட்டங்கள் குட்டிகளுடன் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகளை அவைகளைத் தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பாகப் பயணம் செய்ய வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. இங்கு உள்ள உடுமலை உட்பட 4 வனச்சரக பகுதியில், யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வசிக்கின்றன.

குறிப்பாக அமராவதி வனச்சரக பகுதியில் உடுமலை- மூணாறு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த வழியே பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அதிகளவு இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.



மலைப்பகுதிகளில் உள்ள உடுமலை- மூணாறு சாலை, சின்னாறு, எஸ். வளைவு, யானைக்காடு உள்ளிட்ட சாலையின் பல்வேறு பகுதிகளில், காலை மற்றும் மாலை நேரங்களில் ஆங்காங்கே குட்டிகளுடன் யானைக் கூட்டங்கள் தென்படுகின்றன.



இதனால், இந்த வழித்தடத்தில் செல்வோர் அவற்றை ரசித்துச் செல்கின்றனர். இதில் ஒரு சிலர், அவற்றை அச்சுறுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.



இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: சோதனைச் சாவடிகளில், வாகனங்களை அனுமதிக்கும் போது, யானைகள், வன விலங்குகளைக் கண்டால், அவற்றுக்குத் தொல்லை கொடுக்காமல், பாதுகாப்பாக தூரத்தில் காத்திருக்க வேண்டும் அல்லது வனத்துறை சோதனைச்சாவடிக்கு திரும்ப வந்து விட வேண்டும்.

மேலும் அவை, வனத்திற்குள் சென்றதை உறுதி செய்த பிறகே, சாலையைக் கடக்க வேண்டும் என அறிவுறுத்தி வருவதோடு, இந்த சாலையில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வன விலங்குகளுக்குத் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது, அபராதம் உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...