கோவை வால்பாறை அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டெருமை - வனத்துறையினர் ஆய்வு

வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் அருகேயுள்ள வனப்பகுதியில் காட்டெருமை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் காட்டெருமையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதி அருகே சிறிய வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, மான், யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இதனிடையே இந்த வனப்பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் சண்டையிட்டு கொண்டதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்று வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.



அப்போது அருகில் சென்று பார்த்த போது, காட்டெருமை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இறந்த காட்டு எருமையின் உடலில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அதில், 4 நாட்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் சண்டை போட்டுக் கொண்டதில் ஒரு காட்டெருமைக்கு காயங்கள் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இறந்த காட்டு எருமையின் உடலை வனத்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...