கோவையில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

கோவையில் நடைபெற்ற கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில்.


கோவை: கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டப அரங்கில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை எக்கனாமிக் சேம்பர் சார்பாக நான் முதல்வன் எனும் திட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டிற்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி, போத்தனூர் சாலையில் உள்ள வெட்டிங் பேலஸ் மண்டப அரங்கில் நடைபெற்றது.



இதில் தலைமை விருந்தினராக ஜாமியா இல்மியா அறிவியல் மற்றும் அரபிக் ஆராய்ச்சி கல்லூரியின் நிறுவனர் மௌலானா கலீல் அஹ்மத் முனீரி கலந்து கொண்டார்.



10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் எதிர்கால துறையைத் தேர்வு செய்வது எப்படி மற்றும் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஜி.எஸ். சமீரன் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்தபடி பதிலளித்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ரஹ்மான், மாணவ, மாணவிகளின் எதிர்கால துறைகளைத் தேர்வு செய்வது குறித்த ஆலோசனைகளை வழங்க இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளதாகவும், இதில் கலை அறிவியல், மானுடவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்றும், தலைமைப் பண்பு போன்றவற்றை வளர்த்து சாதனையாளர்களாக வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...