டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி - திருப்பூர் அணி அசத்தல்

திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் நடைபெற்ற டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆந்திரா அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி.


திருப்பூர்: 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் அணி, ஆந்திர அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது.

திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான டி.எஸ்.சி சேலஞ்சர் ட்ராபிக் கிரிக்கெட் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பூனே உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எட்டு அணிகள் கலந்து கொண்டன. டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபிக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் திருப்பூர் மற்றும் ஆந்திர அணி மோதின. இதில் முதலில் விளையாடிய ஆந்திரா அணி 133 ரன்கள் எடுத்தது.



134 என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணியினர் வெற்றி இலக்கை எட்டி போட்டியில் வெற்றி பெற்றனர்.



இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், இந்தியன் கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் உள்ள சரத் ஸ்ரீதர் , தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் பழனி உள்ளிட்டர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கும், கலந்து கொண்ட மற்ற அணியினருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...